Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

உயிரா? காசா? ......... காசுதான்.



ரண்டு நண்பர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
மிகவும் பரபரப்பானதொரு சாலையது.இவர்களோடு இன்னும் பலர் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர்களில் ஒருவன் திடீரென நின்று சற்று தொலைவில் உள்ள ஒரு புதர்ப்பக்கம் சென்றான்.
அங்கே ஒரு பூனைக்குட்டி ஒன்று முள்ளில் சிக்கி கத்திக்கொண்டிருந்தது.
அதனருகே சென்ற நண்பன்
புதரை விலக்கி அதனுள் சிக்கியிருந்த பூனைக்குட்டியை விடுவித்தான்.
பூனைக்குட்டி துள்ளிக் குதித்து ஓடியது.

இதைப்பார்த்த இன்னோர் நண்பனுக்கு ஆச்சரியம்!
”இத்தனை பேர் சாலையில் நடந்து செல்கிறோம்,ஆனால் இந்
சந்தடியில் யாருக்குமே பூனைக்குட்டியின் சத்தம் கேட்கவில்லை, உனக்கு மட்டும் எப்படி கேட்டது?” என்று வினவினான்.



அதற்கு பூனைக்குட்டியை காப்பாற்றியவன் பலமாக சிரித்தான்,”என்ன இந்த பூனைக்குட்டியின் சத்தம் இந்த சந்தடியில் கேட்கவில்லையா?”என்று கூறிவிட்டு


”சரி இப்போது பார்” என்று சொல்லிக்
கொண்டே தன் சட்டைப்பையிலிருந்து கொஞ்சம் சில்லரைக் காசுகளை எடுத்து தரையில் போட்டான்.

அந்த சில்லரை சத்தம் கேட்டதும் நடந்து சென்று கொண்டிருந்த மற்றவர்களல்லாம் திரும்பிப் பார்த்தனர்.

பின் பூனைக்குட்டியைக் காப்பாற்றியவன்
மற்றவனிடம் சொன்னான்”காசு சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தவர்கள் பூனைக்குட்டியின் சத்தத்திற்க்கு செவி சாய்க்கவில்லை பார்த்தாயா?
இதுதான் உலகம்.அவர்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே திரும்பிப் பார்ப்பார்கள்,இல்லையெனில் காணாதது போல் சென்றுகொண்டே இருப்பார்கள்.உதவும் மனப்பான்மை கூட ஏதோ
ஒன்றை எதிர்பார்த்தே செய்கின்றனர்,”
என்று சலித்துக்கொண்டான்.





(ஒரு கதை சொல்லி ஊரைத் திருத்தலாம்னு முடிவு!
அதான்! இப்படி சும்மா ஒரு கதை.)

இனி வரும் பதிவுகள் சிலவற்றில் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான மரங்கள் சிலவற்றின் சிறப்புகளை எழுதலாம் என்று உள்ளேன்,சரி அடுத்த பதிவில் பார்ப்போம்!



0 comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips